
"என்னைக் கொஞ்சம் நிம்மதியாத் தூங்க விடுங்களேன். மனிதனா மாறி உங்களைப் போல அல்லல் பட நான் ரெடி இல்ல, ரெடி இல்ல, ரெடி இல்ல ..."
ரொம்ப நாள் ஆச்சே என நேற்று வரைய அமர்ந்தேன். வழக்கம் போல நூலக புத்தகங்கள் இரைந்து கிடக்க, நமக்கு வசதியாய் இருக்கும் இரண்டு படங்களைத் தேர்வு செய்து கொண்டேன். முதலில் 'நம்மவர்'. அசத்தலாகப் படுத்திருக்கும் அந்தச் சாயலே படத்தை வரையத் தூண்டியது.
10x4 வரைதாளில் அரை மணிநேரத்தில் பேனாவில் சிம்பன்ஸியின் ஆனந்த சயனம் :)
8 comments:
ஆனந்த சயனம் அற்புதமாய வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் சதங்கா!
சயனத்துக்கு தயாராகிறது என நினைக்கிறேன். பெரிது செய்து பார்க்கையில் அரைக்கண் திறந்து சொகுசாய் பார்த்துக் கொண்டிருக்கிறதே:)!
ம்ம்...அசத்துறீங்க சதங்கா!
கண்ணாடிய பாத்து வரைஞ்சுட்டு நூலக புத்தகம் அது இதுன்னு ஜல்லியா? :-)
நல்லா இருக்கு படம்.
ராமலக்ஷ்மி said...
//ஆனந்த சயனம் அற்புதமாய வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் சதங்கா!//
மிக்க நன்றி.
//சயனத்துக்கு தயாராகிறது என நினைக்கிறேன். பெரிது செய்து பார்க்கையில் அரைக்கண் திறந்து சொகுசாய் பார்த்துக் கொண்டிருக்கிறதே:)!//
அதே அசத்தலான தோரணை தான் ஒரிஜினல் படத்தில். அந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறேன்னா சொல்றீங்க ? :)
அன்புடன் அருணா said...
//ம்ம்...அசத்துறீங்க சதங்கா!//
அசத்தல் 'நம்மவர்' தான். நம்ம பார்ட் கிறுக்கறது மட்டுமே :)
நாகு (Nagu) said...
//கண்ணாடிய பாத்து வரைஞ்சுட்டு நூலக புத்தகம் அது இதுன்னு ஜல்லியா? :-)//
உம் நினைவாலே படம் வரைந்து
ப்லாகிலே பதிந்திட்டேன், ரிச்மண்ட் குசும்பாரே ஓடி வாரும் !!!!
//நல்லா இருக்கு படம்.//
'என்' கிற வார்த்தைய விட்டுப்புட்டீங்களே தல :))))
அன்பின் சதங்கா
அருமை அருமை - சிம்பன்ஸி அருமை - திறமை வாழ்க
சதங்கா நாட்கள் கழித்துப் பார்ப்பதற்கு மன்னிக்கணும்.
சார் ஒயிலாத் தூங்க முயற்சிக்கிறார்.
உங்கள் கைகளுக்கு இதோ வைர மோதிரம்.
Post a Comment