Friday, May 2, 2008

1. ஜோக்(கடி)க்க வாரீயளா

வரையறதுல இருக்கற நுட்பம், வண்ணம் தீட்டுவதில் இல்லை என்பது எனது தாழ்மையான எண்ணம். ஏனெனில் கோடுகள் மட்டுமே பிரதானமாய் இருக்கும் பட்சத்தில் பொருமையாய் வரைவது சற்று சிரத்தையான காரியம் !

நாம் பத்திரிகைகளில் படிக்கும் (பார்க்கும்) கார்ட்டூன் ஜோக்குகள் அதே ரகம் தான். பார்க்க எளிதாய் தோன்றினாலும் வரைந்து பார்க்கும்போது தான் அதன் சூட்சுமம் புரியும். நிறைய ஜோக்குகளில் வந்த படங்கள் வரைந்திருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாய் பதிகிறேன். இது முதல் படம். பத்திரிகையில் என்ன ஜோக் என்று நினைவில் இல்லை. எனது எண்ணத்தில்:



"கஸ்டமர் புடி கஸ்டமர் புடினு கஷ்டப்படுத்தினீங்களே, நீங்களே வந்து பாருங்க, கலெக்ஷன் ஆனா தான் க்ரெடிட் கார்ட் ட்யூ கட்ட முடியும்னு சொல்றாங்க !"

உங்கள் மனதில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.