
அநேகமா எல்லா சிவன் கோவில்களிலும், சிவனைப் பார்க்கறோமோ இல்லையோ, நந்தியைக் பார்க்காமல் இருக்க முடியாது. சிவனைப் பார்க்கறதுக்கே இவர் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் பார்க்கணும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
பொதுவாக, யாராவது குறுக்கே வந்தால், 'நந்தி மாதிரி ஏன் வழி மறிக்கிறாய்' என்று நையாண்டியும் செய்வார்கள்.
ஆத்திகமோ, நாத்திகமோ ... பார்த்தவுடன் பிடித்து வரைந்த படங்களுள் இந்த நந்தி தேவனும் ஒன்று, வருடம் 1992. அப்பதான் ப்ரஷ் பிசிறில்லாமல் என் கைக்குப் பழகிய நேரம். அதனால், பென்சில் அவுட்லைன் போடாமல், ப்ரஷ் கொண்டு வரைந்த சிம்பிளான ஓவியம்.